1071. § | இழிவான இயல்புடையோர் புறத் தோற்றத்தில் மக்களைப் போல் இருப்பர். இது போன்ற ஒப்புமையை யாம் எங்கும் கண்டதில்லை.§ |
1072. § | நன்மையைச் செய்பவரை விட இழிவுள்ளம் உடையோர் மகிழ்வுடன் வாழ்வர். மனச்சாட்சி என்பது அவர் உள்ளத்தை என்றுமே உறுத்துவது இல்லை.§ |
1073. § | கொடிய கயவரும் தாம் விரும்பிய வாறே எதனையும் செய்து நெடுங்காலம் வாழ்தலால் அவரும் தேவரைப் போன்றவர்.§ |
1074. § | கீழ் மகன் தன்னிலும் கொடியவனைச் சந்தித்தால், அவனிலும் கொடுரச் செயல்களைப் புரிந்து தானே பெருமிதம் கொள்வான்.§ |
1075. § | கீழ் மக்களைத் தூண்டுவது அவர் கொண்டுள்ள பயமே. அது தவிர இலாபம் வருவதில் ஆசை கொள்வதும் அவருக்குத் தூண்டு கோலாகும்.§ |
1076. § | கீழ் மக்கள் தாம் அறிந்த இரகசியங்களைப் பிறருக்குச் சொல்லித் திரிவதால் அவர்கள் பறை முரசைப் போன்றவர்.§ |
1077. § | கன்னத்தில் அறைந்து பல்லை உடைப்பவருக்குப் பயந்தாலன்றி கயவர் வேறெவருக்கும் எச்சிற்கையைக் கூட உதற மாட்டார்.§ |
1078. § | மேல் மக்கள் பிறர் குறையைக் கேட்ட உடனே உதவி செய்வர். கீழ் மக்களின் உதவி கரும்புச் சாற்றைப் போல் பிழிந்து எடுத்தால் தான் கிடைக்கும். § |
1079. § | கீழ் மக்கள் பிறர் நன்றாக உடுப்பதும் உண்பதும் கண்டால் பொறாமை கொண்டு அவர்களிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பர்.§ |
1080. § | கீழ் மக்கள் எவ்வகையில் பயன்படுவார் எனின், தமக்கு நெருக்கடியான நிலைமை வரும்போது தம்மையே பிறருக்கு விற்கத் தயங்க மாட்டார்.§ |